நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
கவலை என்பதற்கு இருக்கும் பொதுத்தன்மை என்னவென்று தெரியுமா?
மன ஆற்றலை, நம்பிக்கையை அழிக்கும் 71% (சரியான வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், கவலை என்ற வார்த்தை எப்படியோ உருமாறிவிட்டதாக கருதலாம். அதன் மூல வார்த்தை கமலை.
கீழ்கண்ட படத்தில் காண்பது, அக்கால விவசாயிகள், தங்கள் வயலில் உள்ள பயிர்களுக்கு நீர்பாசனம் செய்ய, கிணற்றிலிருந்து நீர் இறைக்கிறார்கள். இதன் பெயர்தான் கமலை. ஆம், கவலையையும் கமலையையும் ஒன்றாக ஒப்பிடுவார்கள்.
ஒன்று கிணற்றிலிருக்கும் தண்ணீரை அப்படியே வாரி வெளியில் இறைத்துவிடும். இன்னொன்று நம் மன ஆற்றலை, நம்பிக்கையை அப்படியே வாரி வெளியில் இறைத்துவிடும்.
கவலை இருந்தால் எதனால் என்று ஆராய்து, தீர்க்க முயற்சிக்க வேண்டும், தேவையில்லாத கவலையை ஒழித்துவிடவும் வேண்டும்.
வாழ்க வளமுடன்.
Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments