நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
வஞ்சம் எப்படி நமக்குள் உருவாகிறது தெரியுமா?
அடக்கிவைக்கப்பட்ட சினமே வஞ்சமாகிறது 83% (சரியான வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், வாழ்வில் அன்றாடம் நமக்கு, சினம் வருவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. சினத்தை தவிர்க்க வேண்டும் என்பதுதான் வேதாத்திரியத்தில் நாம் கற்கும் கல்வி. ஆனால் அதை பழகாமல், சினம் கொண்டால் அதை பிறர்மீது செலுத்தவேண்டிவரும்.
நம் சினத்தை எல்லோரிடமும் காட்டிட முடியுமா? நம்மை விட தகுதியில் குறைவானவர்களிடமே அது செல்லுபடியாகும். அன்பான வாழ்க்கைத்துணை, ஒரு உயர்ந்த மனிதர், அதிகாரத்தில் உள்ளவர், செல்வாக்கு உள்ளவர், ஆளுமை உள்ளவர் என்றால் அவரிடம் நாம் சினம் கொள்ளமுடியுமா?
அதனால் சினம் கொண்ட நாம், அதை தேக்கி வைத்து ‘காலம் வரட்டும்யா அப்போ நான் யார்னு காட்டுறேன்’ என்று அடக்கிக்கொண்டால், அந்த சினம் உருமாறி, வஞ்சமாக மாறிவிடுகிறது.
சினம், வஞ்சமாக மாறிவிட்டால், நம்மையும் சேர்த்தே அழிக்கும் என்பதை அறிக. சினம் தவிர்ப்போம் வ்ஞ்சமாக மாறாது காப்போம்.
வாழ்க வளமுடன்.
Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments