நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
நாம் யோகத்தில் இணைவதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கிறது?
கடவுளையும் என்னையும் அறிவதற்காக 26% (சரியான வாக்கு)
ஆனால் நீங்கள் தேர்வு செய்தது, இந்த பிறப்பின் உண்மை அறிவதற்காக 60% (அதிகமான வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், இப்படி,வேடிக்கையாக சொல்லலாமே, ஏனடா பிறந்தோம்? என்று நாம் துன்பத்தில் நினைப்போம். அப்போதெல்லாம் தன்னை அறிய ஆர்வம் எழாது. யோகம் குறித்த நினைப்பும் இருக்காதுதானே?! துன்பத்திலிருந்து தப்பிக்கத்தானே தோன்றும்.
எனவே நமக்கு, நம் வாழ்வில் பொதுவாக, கடவுள், தெய்வம், இறை என்பதை நாம் எல்லோருமே சிறுவயதில் அறிந்து கொள்கிறோம். எப்படி வணங்குவது, என்ன வேண்டுவது, என்ன கேட்பது என்பதுவரை எல்லாமே. வளர்ந்த பிறகு, அந்த கடவுள் என்பது என்ன? என்று கேள்வி எழும். அந்த ஆர்வத்தில்தான் யோகத்தில் இணைய ஆர்வம் எழும். யோகத்தில் இணைந்த பிறகுதான் இந்த பிறப்பின் உண்மையை அறிய தூண்டுதலும் எழும்.
வாழ்க வளமுடன்.
Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments