Ticker

6/recent/ticker-posts

Why need to practice Thuriya Meditation for introspection?

துரியதவம் இற்றியபிறகு அகத்தாய்வு செய்யவேண்டும்!


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 224Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, துரியதவம் இற்றியபிறகு அகத்தாய்வு செய்யவேண்டும் என்பது ஏன்?

மனம் நுண்ணிய அலை நீளத்தில் இருக்கும் என்பதால்.  14% (சரியான /அதிக வாக்கு)

-

அன்றாடம், நாம் பசிக்கு உணவு உண்கிறோம். அந்த உணவு தினமும், சுத்தமாக இருக்கும் பாத்திரங்கள் வழியாகவே சமைக்க வேண்டும். அதுபோல, உணவு பொருட்களும் சுத்தமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நம் உணவு செரிமானம் கெட, உடல் பாதிப்படைய, நோய் உருவாக அதுவே காரணமாகி விடும் இல்லையா?!  

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! தினமும் அழுக்கான பாத்திரங்களை, உணவு பொருட்களை சுத்தம் செய்வதுபோலவே நம் மனதிலும் எண்ணம்,சொல், செயல் சுத்தப்படுத்தினால், நம் வாழ்வு வளமாக இருக்குமே?! என்ற நோக்கத்தில், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய பயிற்சியே அகத்தாய்வும் தற்சோதனையும் ஆகும்.

இதற்கு துரியதவம் மிகமுக்கியமாக செய்துமுடித்து பிறகு இப்பயிற்சி செய்ய வழியுறுத்துகிறார். ஏன்? துரியதவம் இயற்றினால், மனம் நுண்ணிய அலை நீளத்தில் அமையும். எதையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவுகாணவும், அந்த முடிவில் உறுதியாக நின்றிடவும், அந்த முடிவுக்காக நம்மை செயல்படுத்த வேண்டும் என்ற வேகமும் நமக்கு கிடைக்கின்றது. இதனால் நம் மனதில் உள்ள, இதுவரையும் நாம் தவறாக செய்து வந்த செயல்களை, அதற்கு மூலமான எண்ணங்களை திருத்தி அமைக்க முடிகிறது. மேலும் துரிய தவத்தின் ஆற்றல் மிக உன்னதமானது. அதன் ஆற்றலை, நம்மை திருத்தி அமைக்கவும் பயன்படுத்திக் கொள்கிறோம்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments