Ticker

6/recent/ticker-posts

Neutralization of Anger practice by Vethathiri Maharishi

சினத்தை தவிர்க்க வேதாத்திரி மகரிஷியுன் பயிற்சி உதவுகிறது!


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 309Votes/ 24Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, திடீரென்று சினம் எழுந்தால் உங்கள் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?

உடனே சினம் எதற்கு என்று தவிர்த்து விட முயற்சிப்பேன்  60% (சரியான /அதிக வாக்கு)

-

அன்பர்களே, உடனே சினம் எதற்கு என்று தவிர்த்து விட முயற்சிப்பேன் என்பதை, முழுமையாக தவிர்த்துவிட பழகவேண்டியது அவசியம். வாழும் வாழ்வில் சினம், கோபம் இவற்றை, மனிதனின் இயற்கை குணம் என்றே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சினம், கோபம் இருந்தால்தான் அவன் உணர்வு உள்ளவன் (ள்) என்று நினைக்கிறோம். ஆனால் வேதாத்திரி மகரிஷி ‘இதெல்லாம் கருத்தொடர் பதிவுகள்’ என்று விளக்கம் தருகிறார்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! சிறுகுழந்தைகள் கூட கோபமாக இருப்பதையும், அதை வெளிக்காட்டும் விதமாக உடனே அடிப்பதையும், எதேனும் தூக்கி வீசுவதையும், நம் கையை கடிப்பதையும், தரையில் விழுந்து புரண்டு அழுவதையும் நாம் காணமுடியும். அப்படியானல் இது, தன்மையாக, குணமாக, பதிவாக ஏற்கனவே இருக்கிறது என்பது தெரிகிறது. மனம்+இதனாக வந்த மனிதன், இதமான மனதை வைத்துக்கொண்டவன் என்றால், அவனுக்கு சினம், கோபம் எதற்கு? அதனால் விளைந்த நன்மைதான் என்ன? என்று சிந்தித்தால் மிகச்சரியான விடை கிடைத்துவிடாது. 

எனவே மனிதன் சினத்தை, தவிர்க்க வேண்டும் என்று, அதற்கான தற்சோதனை பயிற்சியும் வடிவமைத்து தந்திருக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இந்த பயிற்சியில் சிந்தித்து, தெளிவு பெற்று அதை நம் வீட்டிலேயே செயல்படுத்தி பழகிக் கொள்ளலாம். வேறு எந்த வழியிலும் சினம், கோபத்தை தவிர்த்திட முடியாது, ஒருவேளை அது தடுக்கப்பட்டாலும், வஞ்சமாக மாறிவிடும் என்பதையும் மறவாதீர்கள். மேலும் சில தேர்வுகளும் உள்ளன, இவை குறித்து நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்.

உடனே ஒன்று முதல் பத்துவரை எண்ணுவேன் 5% 

கட்டுப்படுத்த முடியாமல் சத்தம் கூட்டி திட்டிவிடுவேன் 22%

முகத்தை திருப்பிக்கொண்டு நகர்ந்துவிடுவேன் 9%

கையில் கிடைத்ததை எடுத்து வீசி எறிவேன் 4%

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments