வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 351Votes/29Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, தவம் செய்து முடித்தவுடன் என்ன செய்வீர்கள்?!
ஏதேனும் பொருள்குறித்து 10 நிமிடம் சிந்திப்பேன் 12% (சரியான வாக்கு)
-
அன்பர்களே, இங்கே நாம் அதிகமான வாக்கை எடுத்துக்கொள்ள இயலாது, ஏனென்றால் நாம் நன்மை குறித்து ஆராயப்போகிறோம். ஒவ்வொரு நாளும் நாம் காலையும், மாலையும் தவம் இயற்றி வருகிறோம். வாய்ப்பு கிடைத்தால், அருகில் உள்ள மனவளக்கலை மன்றத்தில் நிகழும் தவத்திலும் கலந்து கொள்வோம். ஒவ்வொரு தவமும் 20 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 40 நிமிடம் நிகழலாம். இந்த தவம் முடித்தவுடன், நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இங்கே நாம் சிந்திக்க இருக்கிறோம்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! தவத்தில் நமக்கு தனியான நோக்கம் எதேனும் உண்டா? இல்லவே இல்லை. தன்னை அறியவேண்டும், இறையுணர்வு பெறவேண்டும் என்பது மட்டுமே இயல்பாக இருப்பது. அதனால் தனிப்பட நோக்கம் யாருக்குமே இருக்க வாய்ப்பில்லை. சரிதானே?
தவம் தொடங்கும் முன்பும், தவம் முடித்தபின்பும் அன்றாட வாழ்க்கை கடமைகள் உண்டு, அதை மறுப்பதற்கில்லை. ஆனால் தவத்தில் நாம் நுணிகி நின்று அனுபவங்களை பெற்ற அடுத்த நிமிடங்களில், பரபரப்பான உலகியல் சூழலுக்குள் நுழைவது, அந்த தவத்தின் பலனை கெடுத்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால், தவம் முடித்தவுடன் அடுத்த 10 நிமிடம் எதேனும் ஒரு பொருள்குறித்து, அது தவ சிந்தனை, வாழ்வியல் சிந்தனை இப்படி ஏதேனும் ஒன்றாக எடுத்துக்கொண்டு ஆராயலாம். உண்மையில் நல்ல தெளிவோ, விளக்கமோ கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதை நீங்கள் நாளைமுதல் அனுபவமாக பெற முயற்சியுங்கள். நன்மையை நீங்களே அறிவீர்கள்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments