Ticker

6/recent/ticker-posts

Is it possible to live without expectations?

எதிர்பார்ப்பு இன்றி வாழமுடியுமா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 312Votes/25Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, எதிர்பார்ப்பு இன்றி வாழமுடியுமா?

நிச்சயமாக முடியாதுங்க, கொஞ்சமாவது வேணும் 47% (அதிக வாக்கு)

-

அன்பர்களே, இந்த வாக்கெடுப்பில் சரியான வாக்கு தனியே சொல்லப்பட வேண்டும் என்பதால், எதிர்பார்ப்பு என்பது, எல்லோருக்குமே இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டு ஐந்து வாய்ப்புக்கள் தரப்பட்டன. பொதுவாகவே குழந்தை பருவம் முதலாகவே, ‘நாம் கேட்டால் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் கொண்டு வளர்ந்து விடுகிறோம் என்பதே உண்மை. 

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! சிறுவயதில் இருந்தே, இதுவேண்டும், அதுவேண்டும் என்று கேட்டுப்பழகி, ஓர் வித எதிர்பார்ப்பு குணம் நமக்குள்ளாக வளர்ந்துவிடுகிறது. சந்தேகம் இருந்தால், உங்கள் குழந்தையிடம் பேசிப்பாருங்களேன். அந்த எதிர்பார்ப்பு குணம், நாம் வளர்ந்த பிறகு, உலகியல் எதார்த்தம் புரிந்துகொண்ட நிலையிலும் நம்மை விட்டு விலகுவதில்லை. பள்ளி, கல்லூரி, வேலை, சுய குடும்ப வாழ்க்கை என்று வளர்ந்தாலும், நம் எதிர்பார்ப்பும் வளர்ந்து கொண்டே இருக்கிறது தானே?!

நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி, ‘எதிர்பார்ப்பு இல்லை என்றால், ஏமாற்றமும் இல்லை’ என்கிறார். ஆனால், நமக்கோ எதிர்பார்ப்பு இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் இருக்கிறோம் அல்லவா?! காரணம் அந்த அளவிற்கு அதில் முழுமையான கவனம் செலுத்த தொடங்கிவிட்டோம்.

எதிர்பார்ப்பு இல்லையென்றால் முயற்சியும் இல்லை 29%

முழுசா கிடைக்காட்டியும் எதிர்பார்ப்பு இருக்கும் 9%

ரொம்ப கஷ்டம் எதிர்பார்ப்பு இல்லாமல் முடியாது 5%

எதிர்பார்ப்பு எனக்கு இல்லை சொன்னா நம்ப போறீங்களா? 11%

சரி, ஒரு எதிர்பார்ப்பு ‘புஸ்வானமாக’ போய் ஏமாற்றம் அடைந்தாலும், அந்த உண்மை தெரிந்து கொண்டோமா? இல்லையே, மறுபடி அதே எதிர்பார்ப்பு தன்மையை நமக்குள் நிரப்பி விடுகிறோமே?!

நமது இந்த எதிர்பார்ப்பு குணத்தை உடனடியாக நீக்கிட முடியுமா? கடினம் தான், அந்த அளவிற்கு மன உறுதியை நாம் பெற்றாக வேண்டும். இதற்கு தற்சோதனையும், அகத்தாய்வும் துணை நிற்கும். இதை எப்படி பயிற்சியாக செய்வது என்றால், காத்திருங்கள், வேதாத்திரிய சானலில் பதிவாக தருகிறோம்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments