வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 333Votes/22Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, நீங்கள் கற்பது குண்டலினி யோகமே அல்ல என்று யாரவது சொன்னால் என்ன பதில் தருவீர்கள்?!
எனக்கு எளிமையான வேதாத்திரியம் போதும் 59% (சரியான /அதிக வாக்கு)
-
யோகம் யாருக்கும் தேவையில்லை, பக்தி போதும் என்ற நிலை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மாறிவிட்டது எனலாம். அந்த அளவில் வாழும் மக்கள் தங்கள் துன்பங்களில் இருந்து விலகிடவும், இறை என்ற பொருள் குறித்த, தற்கால ஏமாற்றங்களுக்கு விடை காணவும் யோகத்தில் இணைய ஆர்வம் கொண்டார்கள். அது இந்த நாட்களிலும் தொடர்கிறது. வேதாத்திரி மகரிஷி உருவாக்கிய, எளியமுறை குண்டலினி யோகம், மனவளக்கலை இதற்கு பெரும் உதவி புரிந்தது. அதுதான் நமக்கும் உதவியது அல்லவா?
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! இன்னமும் பெரும்பாலோர், யோகம் என்றால், இல்லறத்தை துறக்கவேண்டும், காசு பணம் வைத்துக்கொள்ளக் கூடாது, பிச்சை எடுக்கவேண்டும், இன்பங்களை துறக்கவேண்டும், ஆடைகளை எளிமையாக உடுத்தவேண்டும், காட்டுக்கு போகவேண்டும், உடலை மனதை வருத்திக்கொள்ள வேண்டும் என்ற பழைய கோட்பாடுகளில் தான் இருக்கின்றனர். யோகம் காலத்திற்கேற்றபடி மாற்றம் கொண்டுவிட்டது என்பதை அவர்கள் அறிவதில்லை.
இதனால்தான், மயக்கத்தில் இருந்துகொண்டு, வேதாத்திரியம் என்பது குண்டலினி யோகமே அல்ல என்கிறார்கள்.
இதற்கு மிகச்சரியான பதில், ‘எனக்கு எளிமையான வேதாத்திரியம் போதும்’ என்பதுதான். கேள்வி கேட்டவரை பரிசோதித்து பார்க்க, ‘எது குண்டலினி யோகம் 12%’ என்று கேட்டால், பழைய கடின முறைகளைத்தான் சொல்லுவார். மேலும் முக்கியமாக ‘வேதாத்திரியத்தில் இருக்கிற நமக்கு எந்த சந்தேகமும் இல்லையே 19%’ அவரிடமே ‘உனக்கு என்ன மாற்றம் கிடைத்தது? 3%’ என்று கேட்டால், பதில் சொல்லுவாரா என்பது சந்தேகமே!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments