வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 344 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, வேதாத்திரியம் என்றால் என்ன என்று கேட்போருக்கு உங்கள் பதில் என்ன?
ஒரு நாள் மன்றத்திற்கு வாருங்கள் அங்கே புரியும் என்பேன் 7% (சரியான வாக்கு)
இறைவனை எங்கும் தேடாமல் தனக்குள் பார்க்க வழி 53% (அதிக வாக்கு)
-
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரியம் எந்த அளவிற்கு நம்மை உயர்த்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நம் குடும்பத்தார் மட்டுமல்ல, நம் நண்பர்களும் கூட அறிவார்கள். நம் காதுபடவே பேசவும் செய்வார்கள். அதில் கொஞ்சமாக நமக்கு பெருமையும் எட்டிப்பார்க்கலாம்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! இதுவரை உலகில் நமக்கு கிடைத்துவந்த யோகமுறைகள் கடினமாகவும், புரியாததாகவும், மிக நீண்டகாலம் தொடரவேண்டியதாகவும், குடும்பத்தை விட்டு விலகி இருப்பதாகவும், இந்த பிறவியில் தன்னை அறிய முடியாத தூரத்திலும் இருந்துவந்தது. இன்னமும்கூட அப்படியான யோகமுறைகள் இருக்கிறது.
ஆனாலும் வேதாத்திரியம், எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகமாகும். வாழும் காலத்தில் தன்னையறிந்து, இறையுணர்வு பெற்று, அளவுமுறையுடன் வாழ்ந்து இன்பமே காணலாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்கு அளித்துள்ளார்.
யாரோ ஒரு சிலர் உங்களிடம்,
‘அதென்னங்க வேதாத்திரியம்?’ என்று கேட்டால்,
‘ஒரு நாள் மன்றத்திற்கு வாருங்கள் அங்கே புரியும்’ என்று நீங்கள் பதில் தருவதுதான் நல்லது.
ஏனென்றால், அப்படி கேள்வி கேட்கும் நபரை, மிக சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது. உங்களை ஆராயவும் அதை அவர் கேட்கலாமே?! அதை புரிந்துகொள்ளாமல், ஆஹா இயல்பாக, நல்ல ஆர்வம் உள்ள மனிதராக இருக்கிறாரே?! என்று நினைத்துவிடக் கூடாது. அதனால், அதை புரிந்துகொண்டு பதில் தருவது முக்கியம். இல்லையேல் அவரின் போக்கு, நோக்கம், விருப்பம் மாறிவிட நீங்களே காரணமாகிவிடுவீர்கள். எப்படி தெரியுமா?
‘இறைவனை எங்கேயும் தேடாமல் தனக்குள் பார்க்க வழி’ என்று நீங்கள் பதில் சொன்னால்,
‘நீ பார்த்துவிட்டாயா? எப்படி என்று சொல்?’
‘அதை நிரூபி’
‘பார்த்துவிட்டால் நீ ஏன் இப்படி இருக்கிறாய்?’ என்று எதிர் கேள்விகள் கேட்பார்.
உங்களுக்கு தெரிந்த அளவில் வேதாத்திரியத்தை சொல்லி அவரை குழப்பிவிட நிறைய வாய்ப்புள்ளது. இறுதியில், உங்களை அவர் வேதாத்திரியத்தில் இருந்து இறக்கிவிட்டுவிடுவார். அது உங்களுக்கும் பிரச்சனை ஆகிவிடுமே?! எனவே நீங்கள், முழுமையாக கற்றுத்தெளிந்தால் மட்டுமே பதில் தருக. இல்லையேல், உங்கள் வேதாத்திரிய ஆசிரியரிடம் / மனவளக்கலை மன்ற ஆசிரியரிடம் அழைத்துச்சென்று விடுங்கள் போதும். முக்கியமாக நம் குருமகான் வேதாத்திரி மகரிஷியும், ‘கேள்வி கேட்ட நபரை எப்படியாவது, நமது மன்றத்திற்கு வரவழைத்து விடுங்கள்’ என்ற பதிலை கொடுத்துள்ளார்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments