வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 282 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, காயகல்பம் செய்யும் பொழுது மூச்சை கவனிக்க வேண்டுமா?
ஆம், மூச்சை இயல்பாக வைத்துக்கொள்ள வேண்டும் 58% (சரியான / அதிக வாக்கு)
-
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரியத்தின் வழியாக, நமக்கு கிடைத்த, சித்தர்களின் பரிசுதான் ‘காயகல்ப பயிற்சி’ பருவ வயதில் கற்றுக்கொண்டால், இதன் பலனை முழுமையாக வாழ்நாள் முழுவதும் பெறலாம் என்பது உறுதி. இந்த பயிற்சியில் மூச்சை கவனிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுவதுண்டு.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! யோகத்திற்கும், நாம் சுவாசிக்கும் மூச்சுக்கும் தொடர்பு உண்டுதான். அதனால், காயகல்ப பயிற்சிக்கும் அப்படி உண்டோ? என்ற கேள்வி எழும். ஆனால் ஆசிரியர் இதை கற்றுத்தரும்பொழுது, ஓஜஸ் மூச்சு குறித்து விளக்கம் அளித்திருப்பார். நாம் அந்த நேரத்தில் கவனக்குறைவாக இருந்தால், பின்னாளில் பயிற்சி செய்யும் பொழுது குழப்பம் வந்துவிடும். அதுதான் இந்த கேள்வி எழவும் வாய்ப்பாகிவிட்டது.
காயகல்ப பயிற்சியை பொறுத்தவரை, மூச்சை இயல்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதே போதுமானது. எப்போதுமே சந்தேகம் எழுந்தால், தகுந்த ஆசிரியரிடம் மட்டுமே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஏற்கனவே கற்றுக்கொண்ட உங்கள் நண்பர் சொல்லுவது கூட தவறாக இருக்க வாய்ப்பு உண்டுதானே? எனவே உண்மையான விளக்கம் பெற்று திருத்திக் கொள்க.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments