Ticker

6/recent/ticker-posts

Usage limits in five actions for better life

ஐந்தில் அளவு முறை வாழ்க்கையை சீராக்குகிறதா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 388 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் ஆகிய ஐந்தில் அளவுமுறை கடைபிடிக்கிறீர்களா?

ஏதோ ஓரளவு உண்டு 76% (அதிக வாக்கு)

-

அன்பர்களே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், வேதாத்திரியத்தின் வழியாக, நம்முடைய வாழ்க்கை சிறப்பாகவும், இன்பமாகவும், முழுமையாகவும் வாழவேண்டும் என்பதற்காக, ஆராய்ந்து கண்ட உண்மையில் தந்ததே, ‘ஐந்தில் அளவுமுறை’என்ற விளக்கமாகும்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! இரவு தூங்குவதற்கு முன் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்? குழப்பமாக, சிந்தனை தாக்கத்தில், கலக்கமாக இருப்பார். அவரே தூங்கி எழுந்தவுடன் அந்த மனநிலை எப்படி இருக்கும்? இயல்பான, மகிழ்வாக உணர்வில் இருப்பார். இது ஏன்? 

உறக்கத்தில் அவர் மனம் உற்சாகம் பெற்று, தன்னம்பிக்கையை தந்திருக்கிறது எனலாம். ஆனாலும் உற்சாகம் கிடைக்கும் என்று தூங்கிக்கொண்டே இருக்கமுடியுமா? அது அவரின் வாழ்க்கையை பாதிக்குமே? எனவே உறக்கம் என்பதில் அளவுமுறை தேவைப்படுகிறது அல்லவா?

அதுபோலவே உணவு எடுத்துக்கொள்வதிலும், அன்றாட உழைப்பிலும், பாலுறவு அது தொடர்பான சிந்தனைகளிலும், ஒரு நாளில் ஒவ்வொரு நொடியும் எழும் எண்ணங்களிலும் அளவு, முறை கொண்டு செயல்பட வேண்டும். அதாவது விழிப்புணர்வுடன், நிறைவான நிலையில் என்பதாகும்.

இந்த அளவு முறை கடைபிடித்தலின் வழியாக, நாமே வரவழைத்துக் கொள்ளும் துன்பங்கள் நீங்கிய, இன்பமான வாழ்வை நாம் வாழமுடியும் என்பது உறுதி. இந்த வாக்கெடுப்பின் வழியாக, ஏதோ ஓர் அளவில் என்பது வரவேற்கத்தக்கதே. இது முழுமையாக ‘ஆம்’ என்ற நிலைபாடுக்கு வரவேண்டியது அவசியம்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments