Ticker

6/recent/ticker-posts

Moralization of desire by Vethathiriyam and why?

ஆசையை ஏன் சீரமைக்க வேண்டும் தெரியுமா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 445Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, ஆசையை ஏன் சீரமைக்க வேண்டும் தெரியுமா?

ஆசை சீரமைத்தால் வாழ்க்கை எளிதாகும் 70% (சரியான / அதிக வாக்கு)

-

அன்பர்களே, ஆசை என்பது, மனிதனுக்கு பிறவியாகவும், இயல்பாகவும் இருக்கக்கூடிய தன்மை ஆகும். முக்கியமாக இது தேவையின் பொருட்டு எழக்கூடிய குணம் என்றால் மிகச்சரியாக இருக்கும். ஆசை நமக்கு தேவைதானா? என்று கேட்டால் ஆம் என்றுதான் பதில் கிடைக்கும். அப்படியான ஆசைதான் பலவித வாழ்க்கை பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது என்பதும் உண்மைதான். ஆனால் நாம் அதை, தெளிவாக தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், வேதாத்திரியத்தின் வழியாக, நம்முடைய வாழ்க்கை சிறப்பாகவும், இன்பமாகவும், முழுமையாகவும் வாழவேண்டும் என்பதற்காக, ஆராய்ந்து, அகத்தாய்வு வழியாக, ஆசையை சீரமைக்கலாம் என்று பயிற்சி தருகிறார். ஆசையே வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏன்? ஆசை இல்லாமல் வாழமுடியாது என்று விளக்கமும் தருகிறார். நன்றாக, நீண்டநாள் வாழவேண்டும் என்று நினைத்தால் கூட அது ஆசைதானே? அது எப்படி தவறாகமுடியும்? என்று கேட்கிறார். தேவையில்லாத ஆசைகளை கழித்துக்கொண்டால் போதுமானது. அதற்கான பயிற்சியே ‘ஆசை சீரமைத்தல்’

ஆசையே துன்பத்திற்கு அறிகுறி அதனால்தானே! 15% என்பது பலகாலமாக ‘புத்தரின் பொன்மொழி’யாக நமக்கு கிடைத்திருக்கிறது. பேராசையே துன்பத்திற்கு அறிகுறி என்பதுதான் சரியாக இருக்கும் என்று கருத இடமிருக்கிறது அல்லவா?! தினமும், நொடிக்கொருதரமும் ஆசையை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருப்பது தவறு. எது வேண்டுமோ? எது தேவையோ? அதன் அளவு, முறை, தன்னுடைய தகுதி, நிலை, முயற்சி, செயல் ஆகிய குறித்து ஆராய்ச்சி செய்தபிறகு ஆசைப்பட்டால், அந்த ஆசை சரியா? தவறா? என்பதும் நமக்கு தெரிந்துவிடும் அல்லவா? எனவே ஆசையை சீரமைத்தால், நாம் வாழ்கின்ற வாழ்க்கை ‘மனச்சுமை’ இல்லாமல் எளிதாகும் என்பது உறுதி.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments