வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 360 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, எப்போதும் அருட்காப்பு இட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களா?
ஆம் எப்போதும் எந்நேரமும் எவ்வேலையிலும் சொல்வேன் 68% (சரியான / அதிக வாக்கு)
-
அன்பர்களே, வேதாத்திரியத்தின் வழியாக, நமக்கு கிடைத்த ‘அருட்காப்பு’ மந்திரம் மட்டுமல்ல, சிறப்பான பாதுகாப்பு வளையம் ஆகும். இதை நாம் அனுபவத்தால் பெற முடியும். வேதாத்திரியத்தில் இருப்பவர்களே, இதன் உண்மையை அறியாமல் இருப்பது வருத்தமே. ஆனாலும் உண்மை உணர்ந்தால், அவர்களும் ஏற்று தனக்கும், பிறருக்கும் அருட்காப்பை வழங்கிக் கொள்வார்கள். வேதாத்திரியத்தில் இணையாத, அருட்காப்பை ஏளனம் செய்து, அதை புரிந்து கொள்ளாத அன்பர்களை வாழ்த்தி மகிழ்வோம்!
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘அருட்காப்பு’ தன்னுடைய வாழ்வில், அனுபவத்தால் உருவாக்கிய மந்திரமாகும். நேற்று, இன்று, நாளை என்ற எந்த காலத்திற்கும் பிரிவுபடாமல், முழுமையாக, தெய்வீக அருட்பேராற்றல் எனக்கு உதவ வேண்டும் என்று விழிப்புணர்வாக கேட்டுக்கொள்வது தான் இந்த ‘அருட்காப்பு’.
அருட்பேராற்றல், இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக!
இப்படி சொல்லும் பொழுது, அந்த நேரம் முழுவதும், இறையாற்றலோடு நினைவால் இணைந்து, அதை மந்திரமாக சொல்லுகிறோம். இயல்பாக, இயற்கையாக, செயலில் விளைவு என்பதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம், தாக்கத்திலிருந்து கொஞ்சம் விலகிக் கொள்ளலாம். நாம் எந்த ஒரு வேலையை தொடங்கும் பொழுதும் ‘அருட்காப்பு’ இட்டுக்கொள்வது மிகச் சிறப்பானது, அதுபோல பயணம் செல்லும்போது மட்டும் சொல்லிக்கொள்வேன் 14% என்பதும் சிறப்பு. எப்போதாவது, ஞாபகம் வந்தால் சொல்லிக்கொள்வேன் அவ்வளோதான் 14% என்பது மாறி, எப்போதும் சொல்லிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு அன்பர்கள் வரவேண்டும்.
‘அருட்காப்பு’ குறித்த சந்தேகம் இருந்தால். இந்த காணொளிகள் உங்களுக்கு உதவிடும்.
5) அருட்காப்பு
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments