வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 310Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, சித்தர்கள் வழங்கிய பழவினை, புதுவினை என்றால் என்ன?
சஞ்சித கர்மாவும், ஆகாமிய கர்மாவும் ஆகும் 64% (சரியான / அதிக வாக்கு)
-
சித்தர்கள் தங்களுடைய யோகத்தின் வழியாக, தன்னையும், வெட்டவெளியாக இருக்கும் தெய்வீகத்தையும் இணைக்க, புரிந்துகொள்ள தடையாக இருப்பது என்ன என்று ஆராய்ந்தார்கள். அந்த ஆராய்ச்சியில் கண்ட உண்மைதான், கர்மா என்ற வினைப்பதிவுகள் ஆகும்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! நமக்குள் இருக்கின்ற அல்லது எழுகின்ற கர்மாவின் தாக்கத்தால் அன்றாடம், நம்முடைய பிறவியின் நோக்கமும், கடமையும் திசைமாறுகிறது. அதனால்தான் இயற்கையோடு ஒன்ற முடியாமல், துன்பச் சிக்கலில் சிக்கித்தவிக்கிறோம் என்பதை, சித்தர்கள் விளக்கமாக கண்டனர். அந்த விளக்கத்தில் தான், ஒவ்வொரு மனிதனுக்குள்ளாகவும் கர்மா இருக்கிறது. இந்த கர்மாக்களை சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மா என்று மூன்றாக வடமொழியில் சொல்லுகிறார்கள். ஆனால் சித்தர்கள் பழவினை, புதுவினை என்ற இரண்டடுக்கு வினைப்பதிவுகளாக நமக்கு சொல்லுகிறார்கள்.
எனவே இங்கே பழவினை என்றால் சஞ்சித கர்மாவும், புதுவினை என்றால் ஆகாமிய கர்மாவும் என்ற தெளிவு கிடைக்கிறது.
அப்படியானால், பிராரப்த கர்மா என்பது என்ன என்றால், வளரும்பொழுது, அனுபவத்தால் பெறுகிற கர்மாவை சித்தர்கள் புதுவினையில் இணைத்தே பார்த்தார்கள் என்பது விளக்கமாகிறது!
மேலும்,
ஏற்கனவே இருக்கும் வினையும், இனி வருகிற வினையும் 12%
பிறக்கும் போது இருந்தது, வளரும்போது வருவது 4%
தாய்தந்தையால் வந்ததும், தன் செயலாம் வருவதும் 9%
பிறவி வழி வினை, தன் செயலால் வந்த வினை 11%
என்ற விளக்கங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான் என்றாலும், இந்த வாக்கெடுப்பில் சரியான, அதிக வாக்கு சஞ்சித கர்மாவும், ஆகாமிய கர்மாவும் என்பதே ஆகும்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments