Ticker

6/recent/ticker-posts

It is perfect we mixed level of our Kayakalpa yoga exercise?

காயகல்ப பயிற்சியை காலை, மாலை, இரவு என செய்யாமல் ஒரே நேரத்தில் எல்லாம் செய்வது சரியா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 300Votes/25Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, காயகல்ப பயிற்சியை காலை, மாலை, இரவு என செய்யாமல் ஒரே நேரத்தில் எல்லாம் செய்வது சரியா?

அப்படி சேர்த்து செய்யக்கூடாது, தனிதனிதான் சிறப்பு 62% (சரியான / அதிக வாக்கு)

-

அன்பர்களே,  குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், நமக்குத் தந்த மிகப்பெரும் கொடை, சித்தர்களின் ‘காயகல்ப கலை’ஆகும். பல்வேறு வகையில் பாடல்களில் சொல்லப்பட்டு, செய்முறை தெரியாமல், உலகெங்கும் சிதறிக்கிடந்த, இந்த அற்புத கலையை, கற்று, திருத்தம் பெற்று, நமக்கெல்லாம் தேர்ந்த பயிற்சியாக கற்றுத்தந்தார். 

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! மனவளக்கலை வழியாகவே நாம் இந்த ‘காயகல்ப பயிற்சி’ யை கற்றுக்கொள்கிறோம். இது முழுமையான வித்து நாதத்திற்கும், உயிருக்கும், உடலுக்கும் ஊக்கம் அளிக்கும் ஒரு பயிற்சிமுறை ஆகும். 

இந்த பயிற்சி காலையில் மூன்று நிலைகள், மாலையில் மூன்று நிலைகள், இரவு ஒரு நிலை என்ற பயிற்சிமுறையை கொண்டது. முக்கியமாக ஒவ்வொரு நிலையிலும், பத்து அஸ்வினி முத்திரை, ஒரு ஓஜ்ஸ் மூச்சு என்ற வகையில் அமைத்துக்கொள்வது சிறப்பு. உடல் நன்கு பொருந்திவிட்டால், இந்த அளவை கூட்டிக் கொள்ளலாம். ஆனால் பயிற்சி நிலைகளை மாற்றிடவோ, கலந்து செய்வதோ தேவையில்லை.

காலையில் செய்வதை மாலையும், மாலையில் செய்வதை இரவும், இரவு செய்வதை பகலிலும் செய்யக்கூடாது. ஒவ்வொரு நிலையும், நம் உடல், மனம், இயற்கைக் காலநேர இயக்கம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றியோ, கலந்தோ செய்தால் உடல் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அப்படி உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வதை தவிர்க்கவும்.

முக்கியமாக உங்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கப்பட்டதோ, அதன்படி வழிமாறாமல் செய்வது தான் சிறப்பு என்பதை அறிந்துகொள்க. சந்தேகமோ, குழப்பமோ இருந்தால், தகுந்த ஆசிரியரிடம், நேரில் சென்றுதான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பேச்சில் எழுத்தில் புரியவைக்க முடியாது. அப்படி பகிரவும் கூடாது. காயகல்பம் ஓர் உயர்ந்த தத்துவம் நிறைந்த பயிற்சி முறையாகும்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments