Ticker

6/recent/ticker-posts

Is okay for recalling our daily activities before bed time?

இரவு படுக்கைக்கு முன், அன்று நிகழ்ந்த அனுபங்களை நினைத்துப்பார்ப்பதுண்டா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 252Votes/21Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, இரவு படுக்கைக்கு முன், அன்று நிகழ்ந்த அனுபங்களை நினைத்துப்பார்ப்பதுண்டா?

என்னுடைய தவறு என்ன என்று சிந்தித்துப் பார்ப்பேன் 50% (அதிக / சரியான வாக்கு)

-

அன்பர்களே, பெரும்பாலான தத்துவஞானிகள், மனோவியல் மருத்துவர்கள் பரிந்துரைப்பது, உங்களை உற்சாகம் செய்துகொள்ள, உங்களை திருத்தி அமைக்க, பிறர் மீது நட்புகொள்ள, அன்றைய நாள் நடந்தது எல்லாமே, இரவு படுக்கைக்கு முன் நினைத்துப் பாருங்கள் என்பதுதான்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! இப்படி தூங்குவதற்கு முன்னால் நினைத்துப்பார்க்கும் பழக்கம் உதவுகிறதா? என்றால் ஆம், ஆனால் அதில் கிடைக்கும் மாற்றங்கள் நிலைப்பதில்லை என்பதுதான் உண்மை. இதற்கான காரணம், மனம் விழிப்பு நிலை என்று சொல்லக்கூடிய அளவில் நின்று சிந்தித்து, விளக்கம் பெறுவதில்லை. ஏற்கனவே செய்த செயலின் அடிப்படை நிலை இருந்துதான் நாம், அன்றைய நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கிறோம். இதனால்

இது என்னுடைய தவறு, 

சூழ்நிலையில் அப்படி நடந்துகொண்டேன், 

இது அவர்கள் தவறு, 

அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? 

என்று இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்ய முடியும் என்றாலும் அதை, நாமும், நம் மனமும் ஏற்று திருத்தம் பெறுவது கடினம், யாரோ ஒரு சிலருக்கு சாத்தியமானது என சொல்லலாம். ஏன் அப்படி கடினமாகிறது?

ஒரு தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்றால், மனதிற்கு ஊக்கமும், நிலைத்தன்மையும், உறுதியும் வேண்டும், அது யோகத்தின் வழியாக, தவத்தின் வழியாக மட்டுமே கிடைக்கிறது. 

எனவே நம்முடைய வாழ்வில், நாம் சீராக, சரியாக, திருத்தியாக, நிறைவாக, இன்பமாக வாழவேண்டும் என்றால், நாம் நம்முடைய அன்றாட நடவடிக்கைகளில் இருக்கிற தவறுகளை தவிர்க்க, திருத்தி அமைக்க, வேதாத்திரிய யோகத்தில் பயணிக்கிற நமக்கு  தேவையாகிறது. தற்சோதனை, அகத்தாய்விற்கு நிகராக, இரவில் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை நினைத்துப்பார்த்து, சிந்தித்து விளக்கம் பெறுவது நல்லதே. அன்றாட உழைப்பின் கனம் கூடி, தினமும் இது கடினமாக தோன்றினால், வாரத்தில் ஒரு நாள் என்றும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments