வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 267Votes/20Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, தன்னையறிதலும், முக்தியும், மோட்சமும் வழிபாட்டால் கிடைத்துவிடுமா?
இல்லவே இல்லை, யோகம் ஒன்றேதான் சிறந்த வழி 66% (அதிக / சரியான வாக்கு)
-
அன்பர்களே, உலக நாடுகளுக்கே ஆன்மீக நெறி காட்டி, வழி வகுக்கும் நாடு என்றால் அது நம் இந்திய நாடுதான், அதிலும் யோக நெறி வழியாக, தன்னை உணர்ந்து இறையுண்மையை அறிந்து, உலகுக்கும் சொல்லி, பிறருக்கும் அதை வழிநெறியாக கொண்டுவந்தவர்கள், நம் தமிழ்நாட்டு சித்தர்கள்தான் என்பதில் மிகையில்லை. யோக நெறி வழியாக, யாவரும் ‘நான் யார்?’ என்று உண்மை அறியலாம் என்றாலும் கூட, எல்லோராலும் அது முடியவில்லை. ஏன்?
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! அந்த அளவிற்கு மிக கடினமாக இருந்தது. வேதாத்திரி மகரிஷி சொல்லும் பொழுது, ‘ஒரு நூறு நபர்கள் யோகத்தில் வளர்ந்தால், யாரோ ஒருவர்தான் அந்த உண்மையில் நிலைக்க முடிந்தது’ என்கிறார். அந்த கடினத்தை குறைக்கும் விதமாக, எளிய மக்களை, பாமர்களை யோகம் குறித்த ஆரம்ப நிலைகளுக்கு உயர்த்திடவே, பக்தி என்ற வழிமுறையை சித்தர்கள் ஏற்படுத்தினர்.
ஆனால், காலம் மாறிட, யோக நெறி மறைந்துபோய், பக்தி நெறி என்று தனித்த ஒன்று வளர்ந்துவிட்டது. இதற்கு துணையாக வேதாந்த நூல்களும் எழுதப்பட்டன. அதில் பல சடங்குகளும், வழிபாடுகளும், விழாக்களும் கலந்துவிட்டன. அதற்கு தகுந்தாற்போல, முக்தி, மோட்சம் என்பதற்கான கதைகளும் உருவாகிவிட்டன. எனவே இங்கே துவைதமும், விஷிஸ்டாத்துவைதமும் நிலைத்து, யோக நெறியின் அத்வைதம் கலைந்துவிட்டது.
எனவே தன்னையறிதலும், முக்தியும், மோட்சமும் வழிபாட்டால் கிடைத்துவிடாது, அதற்கு யோகம் ஒன்றேதான் சிறந்த வழியாகும். மாற்றுக்கருத்து கொண்டோர் இருப்பார்கள், அவர்களை அவர்கள் வழியிலேயே செல்ல விட்டுவிடலாம்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments