வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 467votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, தனியாக தவம் செய்வது நல்லதா? சிலர் சேர்ந்து தவம் செய்வது நல்லதா? கூட்டுத்தவம் நல்லதா?
கூட்டுத்தவமே சிறந்த பலனைத் தரும் 72% (சரியான / அதிக வாக்கு)
-
இன்றைய வாக்குப்பதிலும் அதிக அன்பர்கள் கலந்துகொண்டது குறித்து மகிழ்கிறோம். அன்பர்களின் ஆர்வம் நன்று. வாழ்க வளமுடன். வேதாத்திரியத்தில் தவ தீட்சை பெறும் பொழுதே நாம், கூட்டாகவே தவம் இயற்றுகிறோம். கூட்டு என்றாலே இரண்டு நபர்களுக்கு மேல் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தவம் என்றவுடன், ஓர் ஒற்றுமை அங்கே வந்துவிடும் அல்லவா?
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! நம்மை சுற்றிலும் நிகழக்கூடிய நிகழ்ச்சிகள், மாறுபட்ட மனிதர்கள், அவர்களின் மன அலைகள், செய்கைகள் நம்மை தாக்கும். நாம் அதை ஏற்றுக்கொள்வதும், விலக்கிவிடுவதும் நம் மன நிலையை பொறுத்தது. உதாரணமாக, சினம் என்பது ஒரு சங்கிலி என்பார்கள். அதாவது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கடந்துவந்து போய்க்கொண்டே இருக்கும் அல்லவா? அதுபோலவே, இங்கே கூட்டு தவத்திலும் நிகழ்கிறது.
தவம் இயற்றுவதில், ஒருவர் நல்ல அனுபவம் பெறமுடியும், இன்னொருவர் அந்த அனுபவம் பெறமுடியாதவராக இருக்கலாம். சிலருக்கு ஏதோ ஓர் அளவில் அனுபவம் கிடைக்கும். ஆனால், கூட்டுத்தவம் செய்கையில், எல்லோரும் ஒரு சம அளவில், அலைமாற்றம் பெறுவதால், அனுபவம் எல்லோருக்கும் பகிரப்படுகிறது. இது இயற்கையாக, இயல்பாக நிகழும். தவ முடிவில், எல்லோரும் ஒரே மாதிரியான நிலை கிடைத்தது என்று சொல்வதை காணமுடியும். இந்த வகையில்தான் கூட்டுத்தவம் சிறப்பு. கணவன், மனைவி, தீட்சை பெற்ற பிள்ளைகள் ஆகியோர் அளவிலும், கூட்டுத்தவம் இயற்றலாம்.
அப்படியானால், தனியாக தவம் செய்வது நல்லதில்லையா? முதலில் தனியாக தவம் செய்யவது கடினமே. அதனால், சிலநாட்கள் கூட்டுத்தவத்தில் கலந்து கொண்டு, அந்த அனுபத்தின் வழியாக, தனியாக தவம் இயற்றுவதே நல்லது. நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மன்றத்தின் தொடர்பை வலியுறுத்துகிறார். காரணம் கூட்டுத்தவம் அனுபவம் பெறுவதற்காகவே! அதன் பிறகு தனியாக தவம் செய்வதில் நல்ல அனுபவமும், விளக்கமும் கிடைத்திடும்.
தனியாக தவத்தில் பெறும் சந்தேகங்களை குறிப்பெடுத்து, எங்களைப்போன்ற தகுந்த ஆசிரியரிடம் மட்டுமே கேட்டு தெளிவு பெற வேண்டும். பிறரிடம் பகிர்ந்தால், அவர்களுக்கு தெரிந்த அளவில், உங்களை குழப்பிவிடுவார்கள்.
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments