Ticker

6/recent/ticker-posts

How you start the early morning with Vethathiriya Yoga?

உங்களுடைய அதிகாலை எப்படி அமைகிறது?



வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 309Votes/36Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, உங்களுடைய அதிகாலை எப்படி அமைகிறது?

காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம் என்பதாக 53% (அதிக / சரியான வாக்கு)

-

அன்பர்களே, வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் கற்ற யோகசாதனையின் கடினங்களை குறைத்து, எளியமுறையாக மாற்றி அமைத்து, பருவம் வந்த அனைவருமே ஏற்று கற்று செய்துவரும்படி அமைத்திருக்கிறார். குண்டலினி யோகம் என்பதை மனவளக்கலை என்று மிக பொருத்தமாகவும் தந்து, அந்த தத்துவங்களையும் நமக்கு கொடுத்து, பாமர மக்களின் ‘தத்துவஞானி’ என்றும் போற்றப்படுகிறார். 

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! எளிமையாக அவர் தந்த பயிற்சிகளில் எல்லோருக்கும் முதற்கட்டமாக வழங்கப்படுவது, மூன்று ஆகும். அவை,

காயகல்பம்

எளியமுறை உடற்பயிற்சி

தவம்

ஆகியன ஆகும். இந்த பயிற்சிகளில் நாம், நன்கு கற்று தேர்ந்தாகவேண்டும், முதலில் காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி, மனதை உற்சாகத்தில் வைத்துக் கொண்டு, அமைதியாக தவம் இயற்ற வேண்டும். இவற்றை நம் வீட்டிலேயே, இருக்கும் அறையிலேயே செய்துகொள்ள முடியும். ஆனால் நமக்கு என்ன பிரச்சனை என்றால், சரியான நேரம் கிடைப்பதில்லை என்று சொல்லிக்கொள்கிறோம். 

இதற்கு காரணம் என்ன? நம்மிடம் திட்டமிடல் இல்லை என்பதுதான். ஒரு நாளை எப்படி தொடங்கவேண்டும்? என்று நாம் யோசிப்பதே இல்லை. தினமும் எப்போது படுக்கிறோமோ அப்போது தூக்கம், எப்போது எழுகிறோமோ அப்போது அன்றைய நாள் தொடக்கம் என்று தொடர்கின்றோம் அல்லவா? அதை மாற்றி, இரவில் சீக்கிரம் உறங்கவேண்டும், அதிகாலையில் எழவேண்டும் என்று உறுதி செய்து கொண்டு செயல்படுத்த வேண்டும். நேர இடைவெளியில் இருக்கும், பொழுதுபோக்குகளை ஒதுக்கித்தள்ளிட வேண்டும். 

அதிகாலையோ, ஒரு மணி நேரம் முன்பாக எழுந்துவிட்டால், ஒரு மணி நேரம் நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த ஒரு மணி நேரம் போதும் அல்லவா?  எல்லோருக்கும் முன்பாக எழுந்துவிட்டால் அதுவும் ஒரு சௌகரியம்தானே? பொறுமையாக, நிதானமாக காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி செய்துவிட்டு, தவமும் செய்துவிடலாமே?!

இன்று எப்படியோ பழையமாதிரியே கடத்திவிட்டீர்கள் என்றால், நாளை முதல் நீங்கள் மாற்றி அமைக்கலாமே? அதற்கான முடிவும், உறுதியும் உங்களிடம் உள்ளது அல்லவா?

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments