காந்த நிலை அறிந்தால் கடவுள் நிலை அறியலாம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 251 Votes/26 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, காந்த நிலை அறிந்தால் கடவுள் நிலை அறியலாம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?
நிச்சயமாக நான் உணர்ந்திருக்கிறேன் என்று சொல்வேன் 52% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், இறைநிலை உணர்வதற்கு அடிப்படையாக இருப்பது காந்தம் என்ற பேராற்றலே! எனவே ‘காந்த நிலை அறிந்தால் கடவுள் நிலை அறியலாம்’ என்று சிறப்பாக சொல்லியுள்ளார்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! காந்தம் என்ற பேராற்றலை முதலில் நாம் புரிந்துகொள்வது கடினமே. ஆனால் தினமும் தவத்தில் பழகப்பழக, மனதின் வழியாக ‘காந்தம்’ என்ற ஆற்றலை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இதற்கு விடாமுயற்சி, ஆர்வம், ஆராய்ச்சியோடு தவம் செய்வதுதான் சிறந்தவழி. வேறெந்த குறுக்குவழியும் இதற்கு உதவாது என்பதை அறிவீராக!
வெறும் வார்த்தையாலும், பிறரின் அனுபவத்தாலும் கூட உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அவரவர்கள் தனித்தனியே, தன்னுடைய அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ளும் உன்னத நிலைதான் காந்த ஆற்றலாகும்.
காந்தம் என்பது, விண்ணின் சுழற்சியால், அதன் மையத்திலிருந்து வரும் நேரலைகள் என்பது பொதுவானது. இறைவணக்கம் கவியிலும் இந்த வரிகள் இருக்கும் என்பதை தெரிந்திருப்பீர்கள். இந்த நேரலைகள் தரும் கலப்பும், தன்மாற்ற நிலைகளுமே காந்தமும், காந்தத்தின் தன்மாற்றமும் ஆகும்! இது இரண்டுவகையாக உள்ளது, 1) பிரபஞ்சகளத்தில் தோன்றுவது வான்காந்தம் ஆகும் 2) உயிரினங்களின் உடலுக்குள் தோன்றுவது ஊன்காந்தம் / ஜீவகாந்தம் ஆகும்.
இந்த உடலுக்குள் தோன்றும் ஜீவகாந்தமே, தன்னுடைய நிலையில் மாற்றம் கொண்டு கடவுள் நிலை அறிய துணை செய்கிறது என்றால் மிகையில்லை. அடுத்தமுறையில் இருந்து தவம் செய்யும் பொழுது, இந்த தவம் எனக்கு காந்த தத்துவத்தையும், கடவுள் நிலையையும் புரியவைக்க உதவவேண்டும் என சங்கற்பம் செய்துகொள்க!
நிச்சயமாக நான் உணர்ந்திருக்கிறேன் என்று சொல்வேன் 52% என்ற வாக்கை தேர்ந்தெடுத்தவர்கள், தங்கள் அனுபவத்தை ஒருசிலவரிகளில், இங்கே பின்னூட்டத்தில், பதிய அழைக்கிறோம்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments