வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 255Votes/24Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, ‘நான் சாந்திதவம் செய்யறதே இல்லைங்க’ என்று பெருமையாக சொல்லுபவரா நீங்கள்?
வாரத்தில் ஒருநாள் சாந்திதவம் செய்துவிடுவேன் 72% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, உலகில், யோக சாதனைக்காக, எத்தனையோ தவ முறைகள் இருக்கின்றன . அவை விருப்பமுள்ளவர்களால் பிற அன்பர்களுக்கு கற்றுக் கொள்ளப்பட்டும், செய்தும் வரப்படுகிறது. ஆனால் சாந்திதவம் என்பது, வெகு சிலருக்கே தெரிந்த தவம் என்பது உண்மையே, ஆனால் மனவளக்கலை யோகசாதனையில் ஆரம்ப நிலையிலேயே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சாந்திதவம் எல்லோருக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! சாந்திதவம் என்பது நம் யோகசாதனையில் ஈடுபட்டு வரும்பொழுது கிடைக்கும், அதீத தவ ஆற்றலை, குறைத்து சரி செய்து, அதை வீண் செய்யாமல், உடலுக்கு தகுந்த சக்தியாக மாற்றிக் கொள்ளும் ஒரு தவ பயிற்சியே ஆகும், வேதாத்திரி மகரிஷி இதை ஒரு வரப்பிரசாதம் என்பார். எந்த அன்பர், மனவவளக்கலை யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டாலும், ஒரு வாரத்தில் அல்லது மூன்றுநாட்களில் கட்டாயமாக, சாந்திதவம் பயிற்சியும் கற்றுக்கொடுக்கப்படும். அந்த அளவிற்கு முக்கியமான தவமுறைதான் இந்த சாந்திதவம் என்பதில் ஐயமில்லை.
இதை, இந்த சாந்திதவம் குறிப்பிட்ட காலத்தில் செய்யாமல் விட்டால் என்னாகும்? என்று கேட்பார்கள். தவம் செய்யும் அன்பருக்கு 1) தலை பாரம் அதிகமாகும் 2) உடல் வலி, தசைகளில் வலி உண்டாகும் 3) சோர்வும், உடல் இயக்கத்தில் தடையும் இருக்கும் 4) தூக்கமின்மையால் அவதிவரும் 5) எப்போதும் ஒருவிதமான பதட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
எனவே, நீங்கள் தவம் தொடர்ந்து செய்துவரும் வேளையில், உயர்வுக்கான தவமுறைகள் மட்டுமல்லாது, அந்த தவ சக்தி அதீதம் என்று நீங்களாக உணர்ந்தால், உடனே சாந்திதவம் செய்துவிடவேண்டும். அதை வாரம் ஒருநாள் வெள்ளிக்கிழமை என்று மனவளக்கலையில், வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே அதை தவறவிடக்கூடாது. ‘நான் சாந்திதவம் செய்யறதே இல்லைங்க’ என்று பெருமையாக சொல்லுவது வீண் பெருமை. உடலும் மனமும் பாதிப்படைய நீங்களே வழி ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள். சாந்திதவத்தின் பெருமை உணருங்கள்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments